தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு துணை தாசில்தாரர் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தனது பெயரை 2006ம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் 2006ம் ஆண்டு பட்டியலில் அவரது பெயரை சேர்க்குமாறும் உரிய பண பலன்களை அவருக்கு வழங்குமாறும் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

Advertisement

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜா குமார் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது. பணப்பலன்கள் சொற்ப தொகை தான் வரும். அதை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது. இதுபோல நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை.

இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம். அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் உத்தரவை அமல்படுத்தியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளரை அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்கள் தள்ளிவைத்தனர்.

Advertisement