தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் கே.சாமி, கடந்த அக்டோபர் மாதம் தனது எக்ஸ் தளத்தில், ‘யார் யாருக்கு தலைமைத்துவ பண்பு இருக்கிறது என்பதை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலை கிடையாது.

Advertisement

சட்டம் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மற்ற கருத்துக்கள் அவசியமற்றது’ என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, நீதிபதியை விமர்சனம் செய்ததாக ஆலந்தூரை சேர்ந்த இளமாறன் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே.சாமி மீது பின்என்எஸ் சட்ட பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கிஷோர் கே.சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, வழக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News