தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதிகளில் அல்ல நீதியில் கடவுளை பாருங்கள்: உச்சநீதிமன்ற அமர்வு கருத்து

Advertisement

புதுடெல்லி: எங்களிடம் கடவுளை பார்க்காதீர்கள், நீதியில் கடவுளை பாருங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.  உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச கோயில் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘தனது கட்சிக்காரர் தனக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மூலமாக சரிசெய்யப்படுகிறார்கள் என்று கூறி வாடிக்கையாளர் நோட்டீஸ் பெற்றதாகவும் கூறினார். இது மிகவும் அவமதிக்கும் செயலாகும் என்றும், சில நேர்மையின்மையை கண்டால் வழக்குகளில் இருந்து நாங்கள் விலகுகிறோம், நீதிபதிகளில் நாங்கள் கடவுளைப் பார்க்கிறோம்” என்று கூறி வருத்தப்பட்டார்.

அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், ‘‘எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். தயவு செய்து நீதியில் கடவுளை பாருங்கள் என்று குறிப்பிட்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

Advertisement