தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்ஸ்ட்ராங் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

 

Advertisement

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,” இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும்தான் உண்மை வெளிவரும்.

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதேபோன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையில் ஆஜரான தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ஒரு முறையீட்டை நேற்று முன்வைத்தார். அதில், ‘‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அமைத்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான வழக்கை நவம்பர் 14ம் தேதி விசாரிப்பதாகவும், பட்டியலில் இருந்தும் நீக்கப்படாது என உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement