தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி-யில் பத்திரிகையாளர் படுகொலை: தப்ப முயன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு

 

Advertisement

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி காவல் துறையினருடனான மோதலில் சுட்டுப்பிடிக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண் சிங் (54). பப்பு என்று அழைக்கப்படும் இவர், பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கின் மருமகன் ஆவார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஹர்ஷ் ஓட்டல் அருகே லக்ஷ்மி நாராயண் சிங் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொலையில் விஷால் என்பவரே முக்கிய குற்றவாளி என்பதை உறுதி செய்தனர்.

அவர் குல்தாபாத்தில் உள்ள மச்சிலி பஜாரில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று இரவு குற்றவாளி விஷால் பதுங்கியிருந்த இடத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த மோதலில், விஷாலின் காலில் துப்பாக்கியால் சுட்டு காவல் துறையினர் அவரை கைது செய்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்புடைய மற்ற இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement