தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜோலார்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

Advertisement

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எம்எல்ஏ தேவராஜி ஆகியோர் வழங்கினர்.திருப்பத்தூர் ஒன்றியம், அச்சமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.சுரேஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, அச்சமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் சத்துணவு கூடம் அமைக்க துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

Advertisement

Related News