தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் பைக்கில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கிவீசிவிட்டு தப்பமுயன்றனர்.

Advertisement

இதை கண்காணித்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாமலேரிமுத்தூர் ஊராட்சி மூலைவிட்டு வட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற கூல் (24), பூரான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கனி (25) என்பதும் 30 கிராம் கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு தப்பமுயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் 2 பேரையும் கைது செய்து 30 கிராம் கஞ்சாவையும், அவர்கள் ஓட்டிவந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைதான 2பேரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? யாருக்கு சப்ளை செய்ய முயன்றார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement