தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என கூட்டறிக்கை; பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் அமைப்பு கண்டனம்

Advertisement

வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த குவாட் அமைப்பு, இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள் எந்த தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், இந்தியா சார்பில் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலியாவின் பென்னி வோங், ஜப்பானின் தகேஷி இவாயா ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், குவாட் அமைப்பு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள் எந்த தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ், ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பாகிஸ்தானையோ அல்லது மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான 4 நாள் போர் குறித்தோ கூட்டறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement

Related News