தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக ஜான்பாண்டியன் மீது வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மாவட்டம், கொங்கன்தான் பாறை கிராமத்தைச் சேர்ந்த நிவன்மேத்யூ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் பூமணி என்பவர் பெயரில் இருந்த வீட்டினை ரூ.19 லட்சத்திற்கு கடந்த 2018ல் கிரையம் செய்தேன். தற்போது வீட்டின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், அந்த வீட்டை தங்களது பெயருக்கு மீண்டும் எழுதித்தருமாறு பூமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் மிரட்டுகின்றனர். நான் வீட்டில் இல்லாதபோது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர், கடந்த மே 27ல் வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நான் கொடுத்த புகார் நிலுவையில் உள்ளது. இதனிடையே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சிலர் வீட்டின் கேட்டில் இருந்த பூட்டை அகற்றிவிட்டு, அவர்கள் ஒரு பூட்டை பூட்டி சென்றுள்ளனர்.
Advertisement

இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு என் உயிருக்கு அச்சுறுத்தலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் புகாரின் மீது 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Advertisement

Related News