தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கு சொந்தம்: முதல்வர் ஹேமந்த் திட்டவட்டம்

Advertisement

சாய்பாசா: ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினருக்கு சொந்தமானது, அவர்கள்தான் ஆளுவார்கள் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சோடாநாக்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் சோரன், ‘‘நாம் தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக போராடினோம். நமது உரிமைகளை பெறுவதற்கும் நாம் போராடுவோம். ஜார்க்கண்ட் பழங்குடியினருக்கு சொந்தமானது என்பதால் இங்கு பழங்குடியினர் தான் ஆட்சி செய்வார்கள்.

மாநிலத்தில் எந்த ஒரு இந்துவும் ஆபத்தில் இல்லை. ஆனால் பாஜ இந்து-முஸ்லிம் கதைகளுடன் மோதலை உருவாக்குவதற்கு மட்டுமே முயற்சித்து வருகின்றது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையுடன் இணைந்து பாஜ என்னை மிரட்டி வருகின்றது. என் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர். ஆனால் நான் ஜார்க்கண்ட் மண்ணின் மகன். நான் பயப்படவும் இல்லை. யாருக்கும் தலை வணங்கவும் இல்லை” என்றார்.

Advertisement