தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் கல்வி அமைச்சர் மரணம்

ராஞ்சி: குளியலறையில் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்த ஜார்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரன், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், மாநில கல்வி அமைச்சருமான ராம் தாஸ் சோரன் (62), கடந்த 2ம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தின் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக ஜாம்ஷெட்பூரில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூத்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று அவரது உடல் விமானம் மூலமாக ராஞ்சி கொண்டுவரப்பட்டது. அங்குள்ள சட்டமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட பதிவில், ‘ராம்தாஸ் சோரனின் மறைவு நம்மை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.