தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி மனைவியை கொல்ல முயற்சி

Advertisement

ராம்கர்: ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை கணவர் கீழே தள்ளி கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் தேவரியாவை சேர்ந்தவர் குஷ்புகுமாரி. இவரது கணவருடன் ஜார்க்கண்டின் பர்க்கானாவில் இருந்து வாரணாசிக்கு செல்வதற்காக வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். புர்குண்டா மற்றும் பத்ராது ரயில் நிலையத்துக்கு இடையே ரயில் வந்துகொண்டு இருந்தது.

அப்போது திடீரென அவரது கணவர் குஷ்புகுமாரியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து குஷ்புகுமாரி தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். பெண் காயமடைந்த நிலையில் கிடப்பதை பார்த்த ரயில்வே லைன்மேன், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த அவர்கள் குஷ்பு குமாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதலில் ராம்கர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் ரிம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட குஷ்புகுமாரி சிகிச்சை பெற்று வருகின்றார். விசாரணையில் ரயிலில் கணவருடன் பயணித்துக்கொண்டு இருந்தபோது அவர் தன்னை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News