தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகைக் கடையில் கொள்ளை முயற்சிமிளகாய் பொடி வீசிய பெண்ணுக்கு 20 வினாடிகளில் 17 முறை ‘பளார்’பாய்ந்து பிடித்து தர்மஅடி கொடுத்த உரிமையாளர்

 

Advertisement

அகமதாபாத்: மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைக்கு கடந்த 3ம் தேதி பெண் ஒருவர் வந்துள்ளார். தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி, வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அவர், உரிமையாளரான சோனி என்பவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

திடீரென, தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து உரிமையாளரின் கண்களில் தூவி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட உரிமையாளர் சற்றே விலகியதால், மிளகாய்ப் பொடி முகத்தில் படுவதிலிருந்து தப்பினார். அடுத்த கணமே, தனது மேஜையைத் தாண்டி குதித்த உரிமையாளர், அந்தப் பெண்ணை கையும் களவுமாகப் பிடித்து சரமாரியாக அறைந்தார். சுமார் 20 வினாடிகளில் 17 முறை அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

உரிமையாளரிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், எதுவும் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க கடை உரிமையாளர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ராணிப் பகுதி காவல்துறையினர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பியோடிய பெண்ணை அடையாளம் கண்டு, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement

Related News