தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயலலிதா தொகுதிக்கு குறி வைக்கும் பாஜ: திருச்சி அதிமுக டென்ஷன்

திருச்சி: ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இம்முறை பாஜ களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக- பாஜ இடையே கூட்டணி உருவானது. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பாஜவுக்கு 50 தொகுதிகள் கேட்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை தெற்கு, நீலகிரி, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, மயிலாப்பூர், துறைமுகம், திருவண்ணாமலை, மதுரை வடக்கு, தாராபுரம், அரவக்குறிச்சி, தளி, விருதுநகர், திட்டக்குடி, தாராபுரம் உள்ளிட்ட 50 தொகுதிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.

குறிப்பாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியையும் பாஜ குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதி 2011ல் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். 1998, 1999 மக்களவை தேர்தல்களில் திருச்சி தொகுதியில் பாஜ வெற்றி பெற்றது. எனவே திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என பாஜ கருதுகிறதாம்.

மேலும் ஸ்ரீரங்கம் கோயில்கள் நிறைந்த தொகுதி என்பதும் ஒரு காரணமாகும். ஆனால் ஸ்ரீரங்கத்தை விட்டு தர அதிமுகவுக்கு விருப்பமில்லை. இதுபற்றி திருச்சி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘ஸ்ரீரங்கம் ஜெயலலிதா வென்று முதல்வரான தொகுதி. கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். இந்த தொகுதியை பாஜ அல்ல, வேறு எந்த கூட்டணி கட்சிகளுக்கும் தலைமை விட்டு தராது. இங்கு அதிமுகவே நேரடியாக போட்டியிடும்’ என்றனர்.

Advertisement

Related News