தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் மலர்தூவி மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ஓரிக்கை, பூக்கடை சத்திரம், காந்தி சாலை பெரியார் தூண் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு, இபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisement

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு, மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கோபால், சோமங்கலம் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் வஜ்ரவேலு, துணை செயலாளர் ஷகிலா வேலு, பொதுக்குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் மாகரல் சசி, மாலிக் பாஷா, முனிரத்தினம், கோவிந்தராஜ், விஜயன், அருண், படப்பை முரளி, வல்லம் பழனி, பேரூராட்சி நிர்வாகிகள் வாலாஜாபாத் ஜெயகாந்தன், குலசேகரன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுராந்தகம்: ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா மதுராந்தகம் நகர அதிமுக சார்பில், எம்ஜிஆர் சிலை அருகே நேற்று காலை நகர செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதே போன்று மாமண்டூரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், துணைத் தலைவர் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் குமரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News