தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜன.24ல் நேரில் ஆஜராக உத்தரவு

பெங்களூரு:ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜன.24ல் நேரில் ஆஜராக பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பறிமுதல் செய்த தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த அசையும் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisement

இந்நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் தரப்பில் ஆஜரான வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,’ உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஆகவே ஒரு மாதகாலம் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’ என்று கூறினார். அதையேற்க மறுத்த நீதிபதி மோகன், ‘இது இன்று, நேற்று நடக்கும் வழக்கல்ல. 20 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

‘‘சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த அசையும் சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் முடிவில் நீதிமன்றம் உறுதியாகவுள்ளது. நாங்கள் சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வேண்டுமானால் முறையிட்டு பெற்று கொள்ளுங்கள்’’ என்று கூறி விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என்றார்.

Advertisement

Related News