தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் பள்ளிகளுக்கான கல்வி நிதியை தர முடியும் என்பதா? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

 

Advertisement

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி திட்டத்தை ஏற்றால் மட்டுமே பள்ளிகளுக்கான கல்வி நிதியைத் தர முடியும்என்று பேசியிருக்கிறார். எதேச்சதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்படுவது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 2400 கோடி ரூபாய் கல்வி நிதியைத் தராமல் வஞ்சிப்பது தமிழ்நாடு மாணவர்கள் மீதான ஒன்றிய அரசின் அக்கறையின்மையைத் அம்பலப்படுத்துகிறது.

பிற மாநிலங்களில் சிபிஎஸ்சி கல்வித் திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. மாநில மொழிகளின் செழுமையை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement