தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈட்டி எறிதலில் இன்று தங்க மகன் நீரஜ்

பாரிஸ் ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடப்பு ஒலிம்பிக்/உலக சாம்பியன் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா (26 வயது) இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்குகிறார். மொத்தம் 32 வீரர்கள் இரு பிரிவுகளாக தகுதிச்சுற்றில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இவர்களில் சிறப்பாக செயல்படும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். 84.00 மீட்டர் தூரத்துக்கு எறியும் வீரர்கள் நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியும்.
Advertisement

ஏ பிரிவு தகுதிச் சுற்று பிற்பகல் 1.50க்கு தொடங்குகிறது. நீரஜ் சோப்ரா இடம் பெற்றுள்ள பி பிரிவு போட்டி பிற்பகல் 3.20க்கு தொடங்கும். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜாக்கப் வாட்லெச் (33 வயது), இந்த முறையும் நீரஜுக்கு கடும் சவாலாக இருப்பார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா ஏ பிரிவில் பங்கேற்கிறார்.

அமித் ரோகிதாசுக்கு ஒரு போட்டியில் தடை

கிரேட் பிரிட்டனுடன் நடந்த ஆண்கள் ஹாக்கி காலிறுதியில், இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் ‘அபாயகரமான ஆட்டம்’ காரணமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விதிகளின்படி அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், ஜெர்மனியுடன் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் அமித் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகளிர் மல்யுத்தம் காலிறுதியில் போராடி தோற்றார் நிஷா

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை நிஷா தாஹியா காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ரவுண்ட் ஆப் 16ல் உக்ரைனின் டெடியானா சோவாவுடன் மோதிய நிஷா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். காலிறுதியில் அவர் வட கொரிய வீராங்கனை பாக் சோல் கம்மிடம் போராடி தோற்றார்.

மனு பாக்கருக்கு கவுரவம்

மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்காக 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாக்கர் (22 வயது), பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய குழுவினருக்கு தேசியக் கொடியேந்தி தலைமையேற்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ‘இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரம். மூவர்ணக் கொடியேந்தி இந்தியக் குழுவினருக்கு தலைமை வகிக்கும் இந்த வாய்ப்பு என்றென்றும் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கும். இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மனு பாக்கர் தனது X வலைத்தள பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.

Advertisement

Related News