தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநி கோயிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு: தமிழர் பாரம்பரிய உடையணிந்து அசத்தல்

பழநி: பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டு பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த 65 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டு வரும் இக்குழுவினர், நேற்று மாலை பழநி வந்தனர். இங்குள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் நேற்றிரவு தங்கினர்.

Advertisement

இன்று காலை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து புலிப்பாணி ஆசிரமத்திலிருந்து அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நன்மை வேண்டி நடந்த சிற்பபு யாகத்தில் கலந்து கொண்டனர். இதன்பின் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜப்பான் பக்தர்களுடன் தமிழக பக்தர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

Advertisement

Related News