தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் எழிலாய் வென்ற லெய்லா: இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஒசாகா: ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நேற்று, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (23), ரோமானியா வீராங்கனை சொரானா மைக்கேலா கிறிஸ்டி (35) மோதினர். துவக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடிய லெய்லா 6-1 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.

Advertisement

தொடர்ந்து நடந்த 2வது செட்டில் கிறிஸ்டி வேகம் காட்டியதால், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.  அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சுதாரித்து ஆடிய லெய்லா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் போட்டியில் வென்ற லெய்லா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் செக் வீராங்கனை தெரெஸா வாலன்டோவா (18), ரோமானியா வீராங்கனை ஜாக்குலின் அடினா கிறிஸ்டியன் (27) உடன் களம் கண்டார்.

அந்த போட்டியின் முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் மோதினர். அதனால் டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் ஜாக்குலின் வசப்படுத்தினார். பின்னர் சுதாரித்து ஆடிய வாலன்டோவா, 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அடுத்த இரு செட்களையும் வசப்படுத்தி போட்டியில் வென்றார். அதையடுத்து, இறுதிப் போட்டிக்கு வாலன்டோவா முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் வாலன்டோவா, லெய்லா மோதவுள்ளனர்.

Advertisement

Related News