தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தல் பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கு நெருக்கடி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது.இதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தால் பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கு நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது. ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி ஆட்சி(எல்டிபி) நடக்கிறது. பிரதமராக இஷிபா ஷிகெரு இருந்து வருகிறார்.ஜப்பானின் நாடாளுமன்றமான டயட்டில் உள்ள இரு அவைகளிலும் அதிகாரம் குறைந்த மேலவையின் 248 இடங்களில் பாதி இடங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.

பிரதமர் இஷிபா ஷிகெரு இத்தேர்தலில் 125 இடங்களில் வெற்றி என்ற எளிய பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். எல்டிபி மற்றும் அதன் கூட்டணி கட்சியான கோமெய்டோவுக்கும் நாடாளுமன்ற மேலவையில் 75 இடங்கள் உள்ளன. இதனால் கூடுதலாக 50 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்ற வேண்டும்.

விலைவாசி உயர்வு, வருமானம் குறைவு மற்றும் சமூக பாதுகாப்பு சுமை மற்றும் பண பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளால் வாக்காளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்படும் ஊடகங்கள் கணித்துள்ளன. இதில் தோல்வி ஏற்பட்டால் இஷிபா பதவி விலக நேரிடும் அல்லது கூட்டணியில் இன்னொரு கட்சியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்று கூறப்படுகிறது.

Related News