ஜன சதாப்தி ரயிலில் பயணம் செய்த தந்தை, மகள் தவறி விழுந்து படுகாயம்!
Advertisement
கோவை: மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஜன சதாப்தி ரயிலில் பயணம் செய்த 4 வயது சிறுமி நிவாஷினி மற்றும் அவரது தந்தை சூர்யா ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement