தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை - மயிலாடுதுறை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கம்

கோவை : கோவை - மயிலாடுதுறை வரை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயில் வாரம் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. காலை 7.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக மதியம் 1.45 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது. மறுமார்க்கமாக பிற்பகல் 3.10 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு கோவை வந்தடையும். கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் நேற்று முதல் புதுப்பொலிவுடன் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. இதனை நேற்று கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Advertisement

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயிலானது தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் ஒரே ரயிலாகும். இந்த சேவை கடந்த 20-1-2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஜன்சதாப்தி ரயிலில் மொத்தம் 20 எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.

இதில், 18 பெட்டிகள் 2ம் வகுப்பு இருக்கையும், 2 பெட்டிகள் ஏசி வசதியும் கொண்டது. மற்ற ரயில் 120 கி.மீ. வேகத்தில் சென்றால் இந்த ரயில் 160 கி.மீ வேகத்தில் செல்லும். பாதுகாப்பு வசதி அதிகம் கொண்ட இந்த ஸ்டீல் பெட்டியில் கொள்ளளவு அதிகம். சாதாரண பெட்டியில் 100 பேர் பயணம் செய்தால், இதில் 120 பேர் செல்ல முடியும். கோவையில் இருந்து திருச்சிக்கு 3.45 மணி நேரத்தில் செல்லலாம். ஏசி பெட்டியில் பயணம் செய்ய 600 ரூபாய்க்கு உள்ளாகவும், மற்ற பெட்டிகளில் ரூ. 200க்குள்ளும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Coimbatore - Mayiladuthurai Jansadapti Express train running with LHP coaches

Advertisement

Related News