தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு காஷ்மீரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 சம்பவ இடத்திலேயே பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர்: பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பட்காமில் உள்ள பலார் என்ற பகுதியில் நடந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் பலார் பகுதியில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த டாடா சுமோ ரக எஸ்யூவி கார் ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தின் தீவிரத்தால் வாகனங்கள் உருக்குலைந்து போயின. மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த துயரச் சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய அரசியல் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"பட்காமில் நடந்த துயர விபத்தில் பல உயிர்கள் பலியாகியிருப்பது குறித்து முதல்வர் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் மருத்துவ வசதியையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணங்கள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணை நடத்தப்படும்" என முதலமைச்சர் அலுவலகத்தின் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பட்காம் சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதால் நான் மிகுந்த வருத்தமடைகிறேன். துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News