தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
Advertisement

இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘‘கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையானது சட்டப்பூர்வமானது. அவர்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட சம்பவங்கள் இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுதந்திர இந்தியாவின் முன்னோடியில்லாதது என்பதை அங்கீகரிப்பது முக்கியமாகும்.

ஒரு முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வருமாறு அரசை வலியுறுத்துகிறோம். லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Related News