தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் உள்ள இடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட உள்ளூர்வாசிகள் தானாக முன்வந்து உதவ முன்வந்துள்ளனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினர்.

உதம்பூர் மாவட்ட ஆட்சியர் சலோனி ராய் நிலைமையை நேரில் கண்காணித்து தகவல் தெரிவித்து வருகிறார். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும் , 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அணைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், உதம்பூரின் துணை ஆணையர் வேண்டுகோளின் பேரில், படுகாயமடைந்தவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related News