தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி 4 வாரங்களாக முடக்கம்: நாளொன்றுக்கு ரூ.85 கோடி இழப்பு!

டெல்லி: ஜாகுவார் நிறுவனம் முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ.85 கோடியும், வாரம் ரூ.600 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ரேஞ்ச் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும் விற்பனையும் முடங்கியுள்ளது. நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு கார் உற்பத்தி 4வது வாரமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், நிறுவன தொழில்நுட்பத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனங்கள் மூடல்

இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஜாகுவார் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களும் பணிக்கு வரவேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஜாகுவார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மீண்டும் பணி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜாகுவார்: நாளொன்றுக்கு ரூ.85 கோடி இழப்பு

ஜாகுவார் நிறுவனம் முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ.85 கோடியும், வாரம் ரூ.600 கோடியும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் சைபர் பாதுகாப்பு மையம் உதவியுடன் தொழில்நுட்பத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சைபர் தாக்குதலில் இருந்து ஜாகுவார் நிறுவனம் மீண்டு வர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

Advertisement