தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்

Advertisement

திருமலை: ஆந்திராவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டனுக்கு தனி விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளார். ஆந்திராவில் கடந்த 13ம்தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன், குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலாவாக தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்காக நேற்றிரவு தாடேப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கன்னவரம் விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் இரவு 11 மணியளவில் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் நேரடியாக லண்டனுக்கு புறப்பட்டார். இந்த மாதம் 31ம் தேதி ஆந்திரா திரும்புகிறார்.

முன்னதாக முதல்வரின் பாதுகாப்புக்காக 4 அதிகாரிகள் லண்டன் சென்றனர். ஜெகனின் பாதுகாப்புப் பணியாளர்களின் செலவை அரசே ஏற்க உள்ள நிலையில் இது தனிப்பட்ட பயணம் என்பதால், முதல்வர் குடும்பத்தினர் செய்யும் அனைத்து செலவுகளும் தனிப்பட்ட செலவுகளாக கொண்டுள்ளது. சி.பி.ஐ. வழக்கில் ஜாமீனில் உள்ள முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாட்டு சுற்றுலா செல்ல சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 31ம் தேதி வரை சென்று வர கடந்த வாரம் ஜெகன்மோகன் முன் அனுமதி பெற்றார். தேர்தல் கடந்த 13ம் தேதி நிறைவு பெற்று, முடிவுகள் ஜூன் 4ம் தேதி வரவுள்ள நிலையில் அதுவரை லண்டனில் உள்ள தனது மகள்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க லண்டன் மற்றும் யு.கே.நாடுகளில் முதல்வர் ஜெகன்மோகன் சுற்றுலா மேற்கொள்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய ஆடம்பர விமானம்

முதல்வரின் லண்டன் பயணத்திற்காக உலகிலேயே மிகவும் ஆடம்பரமான விஸ்டா ஜெட் நிறுவனத்தின் பாம்பார்டியர் 7500 ரக விமானம் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு விமானத்தில் படுக்கைகள் தவிர 14 இருக்கைகள் உள்ளது. இந்த விமானத்திற்கு 1 மணி நேரத்திற்கு ₹12 லட்சம் வாடகையாகும்.

Advertisement

Related News