தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தே.பா.சட்டத்தில் கைதான ஜேக்கப்பின் கூட்டாளி தூத்துக்குடியில் போலீசில் இருந்து தப்பிய ரவுடி கை முறிந்தது

தூத்துக்குடி : பிரபல ரவுடி பிளாக் ஜாக்குவார் ஜேக்கப்பின் கூட்டாளி போலீசின் பிடியில் இருந்து தப்பிச் சென்றபோது தவறி விழுந்ததில் இடது கை முறிந்தது. தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் விஜயகுமார் என்ற ஒன்றரை விஜி (24). இவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை பிரபல ரவுடியான பிளாக் ஜாக்குவார் என்ற ஜேக்கப்பின் கூட்டாளி ஆவார். விஜயகுமார் மீது நெல்லை மாவட்டம் பாளையில் கொலை வழக்கு, தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜோன் என்பவரை கொல்ல முயற்சி செய்த வழக்கில் தென்பாகம் போலீசார் விஜயகுமாரை தேடி வந்தனர். கடந்த 5 மாதங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார் முத்தமிழரசன், ஏட்டுகள் முத்துராஜ், சரவணன், சமியுல்லா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த விஜயகுமாரை மடக்கினர்.

அப்போது போலீசாரின் பிடியில் இருந்து விஜயகுமார் தப்பியோடினார். அங்குள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கை முறிந்தது. போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட போலீஸ் பிடியில் இருந்து இதேபோல தப்பியோடிய விஜயகுமார் தவறி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News