ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சியில் சேர சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்: எம்டிசி அறிவிப்பு
சென்னை: ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சியில் சேர வரும் 10ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்து கழகத்தில், ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ஐடிஐ பிரிவுகளில் (மோட்டார் வாகன மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீஷியன், எலக்ட்ரீஷியன், பிட்டர் & வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவி தொகையுடன் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு வரும் 10ம் தேதி காலை 10 மணியளவில் மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Advertisement