தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐடி ஊழியர் ஆணவ படுகொலை கைதான எஸ்ஐ, வாலிபருக்கு காவல் கேட்டு சிபிசிஐடி மனு

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் (27) காதல் விவகாரத்தில் கடந்த 27ம்தேதி பாளை கேடிசி நகரில் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி நாளை (8ம்தேதி) ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திய பாளை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.  பாளை எஸ்எஸ்ஐ முருகன், ஏட்டு வெயிலாட்சி ஆகியோரிடம், கொலை நடந்த இடம், பாளை போலீஸ் ஸ்டேஷனுக்கும், சம்பவ இடத்திற்கும் எவ்வளது தூரம்?

சம்பவம் நடந்த போது அங்கு யார், யாரெல்லாம் இருந்தார்கள்? சுர்ஜித் தப்பியது எப்படி? என சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, கைதாகி சிறையில் உள்ள எஸ்.ஐ சரவணன் மற்றும் சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

Related News