தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாளையில் ரூ.7.12 கோடியில் விண்கல கட்டுப்பாட்டு மையம்: டெண்டர் கோரியது இஸ்ரோ

 

Advertisement

நெல்லை: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்.28ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து சுற்றுச்சுவர், கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ராக்கெட் ஏவுதளம் (லாஞ்ச் பேட்) அமைக்க கடந்த 27ம் தேதி இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட சிறிய ரக ராக்கெட் ஏவ முடியும். இந்தப் பணிகள் இன்னும் 16 மாதங்களில் நிறைவு பெறும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் அப்போது தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை, பாளையங்கோட்டையில் ரூ.7 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரத்தில் விண்கல கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் மற்றும் மின்சார பணிகளுக்கு இஸ்ரோ டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க வருகிற 26ம் தேதி கடைசி நாளாகும். இந்தப் பணிகளை 9 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ எரிபொருள் ராக்கெட் இன்ஜின் சோதனை மையம் ஆகியவற்றை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் விண்கல கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ அமைப்பது குறிப்பிடத்தக்கது.

* திருச்செந்தூரில் போக்குவரத்து முனையம்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் நிலையில், அதற்கு அருகே திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் போக்குவரத்து முனையமும் இஸ்ரோவின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த போக்குவரத்து முனைய கட்டுமானப் பணிக்கு இஸ்ரோ ெடண்டர் கோரியுள்ளது.

Advertisement

Related News