தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு: 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்துள்ளது. இது 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பாகும். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதனால், எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அபாயம் அதிகரித்ததால், இன்று கச்சா எண்ணெய் விலை 9%க்கும் மேல் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பேரலுக்கு $6.29 (9.07%) உயர்ந்து, $75.65 ஆக இருந்தது. வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் $78.50 வரை உயர்ந்தது; இது ஜனவரி 27ம் தேதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $6.43 (9.45%) உயர்ந்து, $74.47 ஆக வர்த்தகமானது. கடந்த 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதற்குப் பிறகு, இந்த இரண்டு வகை கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களிலும் ஒரே நாளில் பதிவான மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும். இதுகுறித்து ஐஎன்ஜி வங்கியின் ஆய்வாளர் வாரன் பேட்டர்சன் கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அபாயத்தைக் கணக்கில் கொண்டு, சந்தை கூடுதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.

அவசர நிலையை அறிவித்து ஈரான் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. இதனால் எண்ணெய் விநியோகத் தடைகளை மட்டுமல்லாமல், அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் பதற்றம் பரவும் அபாயத்தை எழுப்பியுள்ளது. ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின’ என்றார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்துள்ளதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு 9% சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்தியாவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 என்ற நிலையிலும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Related News