தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் ‘சூப்பர்’: நெதன்யாகு பேட்டி

 

டெல்அவிவ்: இந்தியாவுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ரேடார்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. சுமார் 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இந்தியப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.

இந்தத் தாக்குதலில், இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த ‘பராக்-8’ ஏவுகணைகள் மற்றும் ‘ஹார்பி’ ஆளில்லா விமானங்கள் முக்கியப் பங்காற்றின. அதேபோல், தரை மற்றும் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய பராக்-8 ஏவுகணைகள், 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி, 360 பாகை பாதுகாப்பை வழங்கும் வல்லமை பெற்றவை. இந்த ஆயுதங்களின் செயல்திறன் குறித்து சமீபத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்ஜ் மின் நெதன்யாகு, ‘நாங்கள் வழங்கிய ஆயுதங்கள் போர்க்களத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. அவை போர்க்களத்தில் சோதிக்கப்பட்டவை என்பதால், எங்கள் இருதரப்பு உறவுக்கும் உறுதியான அடித்தளம் உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

 

Related News