தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளவு பார்க்கும் இஸ்ரேல் நிறுவனம்; வாட்ஸ்அப் பயனாளர்களை பெகாசஸ் குறிவைக்க தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம் உளவு பார்ப்பதற்காக தனது பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை வாட்ஸ்அப் பயனர்களின் சாதனங்களில் திருட்டுத்தனமாக இயக்க அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்தின் ஸ்பைவேர் மென்பொருளான பெகாசஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இந்தியாவிலும் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பெகாசஸ் மூலம் வாட்ஸ்ப் பயனர்கள் குறிவைக்கப்படுவதாக கடந்த 2019ம் ஆண்டு மெட்டா நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிலிஸ் ஹாமில்டன் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். என்எஸ்ஓ நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்க கோரிய மெட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ’’வாட்ஸ்அப் பயனர்கள் யாரும் விரும்பாத அல்லது எதிர்பார்க்காத ஸ்பைவேர் மூலம் இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியுள்ளது.

வாட்ஸ்அப்பில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். அவர்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மெட்டா உறுதி செய்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பு வசதியை தகர்த்து, சட்டவிரோத அணுகல் செய்ததன் மூலம் என்எஸ்ஓ குழுமம் வாட்ஸ்அப்பிற்கு ஈடு செய்ய முடியாத தீங்கை விளைவித்துள்ளது’’ என்றார்.

மேலும், வாட்ஸ்அப் பயனர்களை பெகாசஸ் குறிவைக்க நிரந்தர தடை விதித்த நீதிபதி, என்எஸ்ஓ குழுமத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 168 பில்லியன் இழப்பீட்டு தொகையை 4 மில்லியன் டாலராக குறைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News