தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!!

Advertisement

இஸ்தான்புல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் முழக்கமிட்டப்படி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற இந்த பேரணியில் துருக்கி மற்றும் பாலஸ்தீன தேசிய கொடிகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டன.

இஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பேரணியின் போது பாலஸ்தீன மற்றும் லெபனானுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து ஹமாஸ் உடனான போரை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின் போது காசா மீதான போரை உடனடியாக நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பாகிஸ்தானில் கராச்சி மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலத்தீனத்துக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில் பாலஸ்தீனர்கள் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Advertisement