தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு மே.வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஈடி சோதனை

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வழக்கில் 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்ளு ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் விநியோகம், நிதி திரட்டுதல் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது.

Advertisement

இதுகுறித்த விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பட்கா பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்து விடப்பட்டு, வெடிபொருள்கள் தயார் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் மொத்தம் 21 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் பணப்பரிவர்த்தனை மோசடி தடுப்பு வழக்கின்கீழ் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பட்கா-போரிவாலி என்ற இரட்டை கிராமங்கள், டெல்லி, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் உத்தரபிரசேத்தின் சில நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது பணம் உள்ளிட்ட ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்த தகவல்களும் வௌியாகவில்லை.

Advertisement

Related News