தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதில் என்ன பிரச்சனை?: அதிமுக தரப்புக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

Advertisement

மதுரை: கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதில் என்ன பிரச்சனை? என அதிமுக தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்றது இந்த முறைகேட்டை தமிழக காவல்துறை விசாரணை செய்தால் நேர்மையாக விசாரணை செய்ய மாட்டார்கள் எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மற்ற வேண்டும் என்று மதுரை மாமன்றத்தின் அதிமுக கவுன்சிலர் ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த மாதம் இந்த வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், அருள்முருகன் தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரணை செய்ய சிறப்பு காவல்துறை அதிகாரி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏ.டி.ஜி.பி காவல்துறை அதிகாரியை நியமித்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோர் ஆஜராகி வழக்கின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், வழக்கில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ரூ.2 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற வரிஏய்ப்பு முறைகேடு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தனர். இதற்கு அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் நடந்ததை விசாரிப்பது என்பது வழக்கின் திசைதிருப்ப கூடிய செயல் எனவே அதை விசாரிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பதில் தெரிவித்த நீதிபதிகள் வரி ஏய்ப்பு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளீர்கள். கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பதில் தங்களுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினர்.

வரி முறைகேடு முறையாக வசூலித்தால் மக்களின் அனைத்து தேவைகளையும் அரசு செய்து கொடுக்க முடியும். எனவே கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்கலாம். தேவைபட்டால் கூடுதலாக வழக்குப்பதிவும் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரி முறைகேட்டில் எதிர் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்கு தாக்கல் செய்த அதிமுக தரப்பில் கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடையும் விசாரிக்கலாம். சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப்படை போலீசாரே விசாரணையை தொடரலாம் என தெரிவித்த நிலையில், மதுரை ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் .26க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

Advertisement