தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் மழை: திடீர் வெள்ளப்பெருக்கில் இரும்பு பாலம் சரிந்தது

 

Advertisement

உடுமலை: கடந்த 5 நாட்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்ல உதவியாக இருந்த இரும்பு பாலம் சரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது கோவை, திண்டுக்கல், ஈரோடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விடுமுறை தினங்களில் திருமூர்த்தி அணையை சுற்றிப்பார்க்க வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து செல்வது வழக்கம்.

கடந்த 5 நாட்களுக்கு முன் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றின் வழியே திருமூர்த்தி அணையை அடைந்தது. வெள்ளப்பெருக்கில் கான்கிரீட் பில்லர்கள், இரும்பு தடுப்பு கம்பிகள், இரும்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டது. குறிப்பாக அருவிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்பு பாலத்தின் சுவர்கள் மண் அரிப்பால் படிக்கட்டுகளுடன் பாலம் சரிந்தது. சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் வழியாக சென்று ஆற்றை கடந்து அருவிக்கு செல்ல முடியும். இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisement