தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியர் மீது தொடரும் இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கடும் கண்டனம்

 

Advertisement

டப்ளின்: அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு அதிபர், அயர்லாந்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அயர்லாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மீது சமீப காலமாக இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியர்களை குறிவைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து டப்ளினில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக அவசரப் பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியர்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், குடிமக்கள் பிரச்னைக்குரிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய சமூகத்தினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் இழிவானவை; அவை அயர்லாந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவை. மருத்துவம், செவிலியப் பணி, பராமரிப்புத் துறைகள், கலாசாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு எனப் பல வழிகளிலும் அயர்லாந்தின் வளர்ச்சிக்கு இந்திய சமூகம் மகத்தான பங்களிப்பு அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விடுதலைப் போராட்டங்கள் உள்ளிட்ட விசயங்கள் முக்கியமானவை. இத்தகைய வன்முறைச் செயல்கள் நம்மை சிறுமைப்படுத்துகின்றன. இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய நன்மைகளை மறைக்கின்றன. சமூக ஊடகங்கள் உட்பட எந்த வழியிலும் பரப்பப்படும் வெறுப்புச் செய்திகளோ அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சுகளோ அயர்லாந்தின் கண்ணியத்தை பாழாக்கிவிடும். அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழக்கூடிய இடமாக அயர்லாந்து திகழ வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

 

Advertisement

Related News