இரிடியம் மோசடி குறித்து சாமிநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மதுரை: ரூ.1000கோடி மதிப்பிலான இரிடியம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமிநாதன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரிடியம் மோசடி வழக்கானது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. குறிப்பாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தல் ரூ.1 கோடி வரை கிடைக்கப்படலாம் என பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் முதலீடு செய்யவைத்து இவர்களை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மொத்தம் 13 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக சோதனை மேற்கொண்டு தமிழக முழுவதும் 30 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை விசாரித்த போது இதுக்கு மூளையாக செயல்பட்டவர் சாமிநாதன் என்று தெரியவந்தது. இவர்தான் டிரஸ்ட் மூலமாக நடத்தி அதன் பின்னர் முதலீடு செய்ய வைத்து பலபேரிடம் பணத்தை பெற்று ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சாமிநாதன் மூன்று நாட்கள் சென்னை சிபிசிஐடி போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி இவர் மதுரையில நீச்சல் குளத்துடன் கூடிய மூன்று பங்களா மற்றும் சென்னையில் வீடு என பெரிதளவில் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும், இவர் வந்து சில நடிகையுடன் உல்லாசம் இருப்பதுக்கு செலவு செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 5 நபர்களையும் சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றர். அடுத்த கட்டமாக பணத்தை மீட்டு நீதிமன்ற மூலமாக உரியவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளார்.