தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரானில் பரபரப்பு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சமூக சேவகி கைது: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

துபாய்: ஈரானில் மனித உரிமைகள் வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டி கடந்த 5ம் தேதி அவரது அலுவலகத்தில் சடலமாக கிடந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அலிகோர்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மஸ்ஸத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

Advertisement

அதில், பிரபல மனித உரிமை ஆர்வலரும் 2023ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கிஸ் முகம்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பாதுகாப்பு படை மற்றும் போலீசார் நர்கிஸ் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். நர்கிஸ் அடித்து இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் ஈரான் அரசு உறுதிபடுத்தவில்லை.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நர்கிஸ் இருக்கும் இடத்தை ஈரான் அரசு உடனடியாக வெளியிட வேண்டும், எந்த நிபந்தனையும் இன்றி அவரை விடுவிக்க வேண்டுமென நார்வே நோபல் பரிசு கமிட்டி வலியுறுத்தி உள்ளது. சுமார் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நர்கிஸ் கடந்த 2024 டிசம்பரில் மருத்துவ காரணங்களுக்காக தற்காலிகமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News