தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி மோசடி செய்த வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை!!

சென்னை : ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர் அறக்கட்டளை தலைவர், ஐபிஎஸ் அதிகாரி, அரசியல்வாதி என பல வேடங்களில் மக்களை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி என பெண் காவலரை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், ரூ.5 லட்சம் பணம் சுருட்டிய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு விஜயபானு தோல்வியடைந்தார்.

Advertisement

விஜயபானு மீது சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. 8 பிரிவுகளின் வழக்குப் பதிந்த நிலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 2 முதல் 3 ஆண்டு வரை என 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை நடத்தி மக்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்த வழக்கும் விஜய்ப்பனு மீது உள்ளது. அறக்கட்டளை மோசடி வழக்கில் நடத்திய சோதனையில் ரூ.12 கோடி, 2.5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Related News