தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎல் பாணியில் மல்யுத்தம்: டபிள்யுபிஎல் ஏலத்தில் பங்கேற்க 300 பேர் பதிவு

புதுடெல்லி: புரோ ரெஸ்ட்லிங் லீக் (பிடபிள்யுஎல்) மல்யுத்த போட்டிகளுக்கான ஏலத்தில் பங்குபெற, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். ஐபிஎல் போன்று நடத்தப்படும் பிடபிள்யுஎல் மல்யுத்த போட்டிகள் டெல்லியில் மட்டும் நடத்தப்படும் என அதன் அமைப்பாளர்கள் முன்னர் கூறியிருந்தனர். அதன்பின் கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக 4 சீசன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. இந்நிலையில், பிடபிள்யுபிஎல் போட்டிகள் வரும் 2026 ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை, நொய்டாவில் உள்ள இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ‘இந்தியாவில் நடத்தப்படும் பிடபிள்யுபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் பங்கேற்க, 20 நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களும் உள்ளனர்’ என்றார். டபிள்யுபிஎல் போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும், 4 மல்யுத்த வீராங்கனைகள் உட்பட 9 பேர் இடம்பெறுவர். இவர்களில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவராகவும், 4 மல்யுத்த வீரர் அல்லது வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

Advertisement