தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் ஓய்வு

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக விளங்கி பல்வேறு சாதனைகளை படைத்தவர் அஸ்வின் (38). டெஸ்ட் போட்டிகளில் 2வது அதிகபட்சமாக, 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கடந்தாண்டு டிசம்பரில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின், ஐபிஎல் போட்டிகளிலும் அதிகளவில் ஆடி வந்தார். கடந்த 2009ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த அஸ்வின், 221 ஐபிஎல் போட்டிகளில் ஆடி, ஆப் ஸ்பின் மூலம் 187 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட், 7.20. சென்னை தவிர, ரைசிங் புனே சூப்பர் ஜையன்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காவும் அவர் ஆடியுள்ளார்.

Advertisement

கடந்தாண்டு நடந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின், 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளம் ஒன்றில் அவர் வெளியிட்ட பதிவில், ‘நான் பங்கேற்ற ஐபிஎல் அணிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். இது ஒரு சிறப்பான நாள். அதேபோல், சிறப்பானதொரு துவக்கம். ஒவ்வொரு முடிவுக்கும் புதிய துவக்கம் இருக்கும் என்பார்கள். ஐபிஎல்லில் எனது நாள் முடிவுக்கு வந்தாலும், கிரிக்கெட் தொடர்பான வேறு பிற லீக்குகளில் பயணிப்பது குறித்து யோசிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

Advertisement