தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணையின்போது தப்பியவர் கால்வாயில் தவறி விழுந்து பலி?

மதுரை: மதுரை, யாகப்பா நகரை சேர்ந்த தினேஷ்குமார்(24), அஜித்கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் உள்ள திடல் அருகே 3 பேரையும் பிடித்து ஒரு வழக்கின் விசாரணைக்காக அண்ணாநகர் போலீசார் அழைத்துச் சென்றனர். டோல்கேட் பகுதியிலுள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து 3 பேரையும் விசாரித்த நிலையில், மேல் விசாரணைக்காக அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றினர். அப்போது திடீரென தினேஷ்குமார் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், தினேஷ்குமாரை துரத்தி சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது தினேஷ்குமார் வண்டியூர் கால்வாயை தாண்டும் வகையில் தாவி குதித்துள்ளார். அப்போது கால்வாய் நீருக்கு அடியில் இருந்த சகதியில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கியதால் தினேஷ்குமார் இறந்ததாக கூறி, அவரது குடும்பத்தினர், உறவினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காவல் நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News