விசாரணையின்போது காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளான 4 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தர ஆணை
சென்னை: விசாரணையின்போது காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளான 4 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தர தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவர்களை தாக்கியதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கொடுங்கையூர் சாலையில் நின்று கொண்டிருந்தவரிடம் லேப்டாப்பை பறித்துச் சென்ற 4 சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த குணசேகரன் 4 சிறுவர்களை சித்தரவை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement