தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு: மதுரை ஆதீனம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement

இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வயதை சுட்டிகாட்டி விசாரணை அதிகாரி நேரில் சென்று விசாரணை செய்துகொள்ள அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, விசாரணை அதிகாரி கடந்த 20ம் தேதி காலை 11.30 மணியளவில் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து விசாரணையை தொடங்கினார். ஆனால், ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ஆதினத்திடம் விசாரனை செய்யும் போது ஆதின ஆதரவாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தனர். ஆதினத்திடம் விசாரணை அதிகாரி விசாரணை செய்யும் பொழுது விசாரணைக்கு ஆதினமும் ஒத்துழைக்கவில்லை. எனவே, அவருக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக் ஒத்துழைக்க மறுப்பதால் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து மதுரை ஆதீனம் 30ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement