தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பலாத்காரம் 13 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்: போக்சோவில் 2 வாலிபர்கள் கைது

ஆலந்தூர்: கீழ்கட்டளை பகுதியில் 13 வயது சிறுமியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி, பலாத்காரம் செய்து, 8 மாத கர்ப்பிணியாக்கிய 2 வாலிபர்கள் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசுப்பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். சிறுமிக்கு வயிறு வீக்கமாக இருந்ததால் ஏதேனும் கட்டியாக இருக்கக்கூடும் என்று கருதிய பெற்றோர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement

இதனையடுத்து, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மடிப்பாக்கம் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சிறுமி, பாத்ரூமில் குளித்தபோது கீழ்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) மற்றும் நிதிஷ் (19) ஆகிய இருவரும் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான அபிஷேக், நிதிஷ் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement