தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதல்வரை சந்திக்காதது ஏன்? கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கோபி: எடப்பாடி டெல்லி சென்ற நிலையில் முதல்வரை சந்தித்தால் அரசியலாக்கப்படும் என்பதால் சந்திப்பை தவிர்த்ததாக செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி பகுதியில் புதிதாக சாய ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கே.ஏ.செங்கோட்டையன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்நுட்ப குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் சங்கத்தினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கே.ஏ.செங்கோட்டையனை இன்று சந்தித்தனர்.

அப்போது கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: விவசாயிகள் முதல்வரை சந்தித்தபோது என்னையும் அழைத்தனர். முதல்வரை சந்திக்க எனக்கும் முன்அனுமதி அளித்திருந்தனர். மேலும், நான் முதல்வரை சந்திக்க வருவதாக நினைத்துக் கொண்டனர். அமைச்சர் முத்துசாமியும் வாருங்கள் என என்னையும் அழைத்தார். அதற்கு நான் முடியாது என்றும், அவர்கள் (எடப்பாடி பழனிச்சாமி) டெல்லியில் உள்ளனர், அரசியலில் சிக்கலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று கூறி முதல்வரை சந்திக்க செல்லவில்லை என்றார். பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் குறித்து கேட்டபோது செங்கோட்டையன் சிரித்தபடி சென்று விட்டார்.